Sunday, April 11, 2010

சிக்கிமுக்கி - மார்ச் 2010 இதழ்


சிக்கிமுக்கி.காம்



மார்ச் 2010 - இதழ் 5






M.சௌந்தரராஜன் & தாராகணேசன்


கலை
சிற்பம்
சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி


விமர்சனம்
நூல்
கரிகாலன் - இது தமிழராய் உணரும் தருணம்

குறும்படம்
சுப்ரபாரதிமணியன்

Sunday, February 14, 2010

சிக்கிமுக்கி - பிப்ரவரி இதழ்








கவிதைகள்

அய்யப்பமாதவன


செழியன்


தாரா கணேசன்


இளங்கோ கிருஷ்ணன்


வெய்யில்


தீபச் செல்வன்


கதிர்பாரதி


இசை


ஹெச்.ஜி. ரசூல்


ரியான் ஷெரீப்


வேல் கண்ணன்

நெடுங்கவிதை

யவனிகா ஸ்ரீராம்


சிறுகதை

அய்யப்பமாதவன்


அய்யப்பமாதவன்


விஜய் மகேந்திரன்


உஷாதீபன்

தொடர்கதை

கரிகாலன்


கட்டுரை

முருகேச பாண்டியன்


அய்யப்பமாதவன் - தனது படைப்பைப்பற்றி

கவிதை - தமிழ் மொழியாக்கம்

முகுந்த் நாகராஜன் (வாண்டா பிஃப்ஸ்)


கவிதா (ராபியா பாஸ்ரி)


தாரா கணேசன் (ஆர்த்தர் ரிம்பார்ட்)

கவிதை - ஆங்கில மொழியாக்கம்

தாரா கணேசன் (கல்யாண்ஜி)


நேர்காணல்
நாடகம்
வெளி ரங்கராஜன் - பகுதி II தாராகணேசன் & M.சௌந்தரராஜன்


கலை
ஓவியம்
நகரும் சிற்பங்கள் - தேனுகா

சிற்பம்
ஆல்பர்டோ ஜியாகோமெட்டி - தாரா கணேசன்





நிகழ்வுகள்

ஞானக்கூத்தனுக்கு சாரல் விருது


விக்கிரமாதித்தனுக்கு விளக்கு விருது (வெளி ரங்கராஜன்)

Saturday, January 30, 2010

விளக்கு விருது






கவிஞர் விக்கிரமாதித்தனுக்கு விளக்கு விருது








Monday, January 25, 2010







காதலைப் போலவே
காயங்களும் கூட
உன்னதமானவைதான்
நாட்காட்டியின் பக்கங்களில்
உன்னதங்களின்
நிழல் படர்ந்திருக்க
வாசனையற்ற நினைவுகள்
உதிர்கின்றன அதன் மீது
*


நன்றி : கல்கி, ஜனவரி 31 , 2009



எந்த நேரமும்
அறுந்து விழக்கூடிய
மெல்லிய இழையில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகள்

அர்த்தங்கள் உணர்த்தும்
மொழி வசீகரிக்கிறது

தற்செயலாய் உதிரும் அவை
மாறா வடுவை உண்டாக்கவோ
அன்றி, ஆறாப் பழங்காயங்களை
ஆற்றவோ வலிமையுடையன

அவற்றில் சில கீறிப் பிளந்து
விளைவிக்கின்றன
புதிய முளைகளை
வேறு சில
புதைப்பிக்கின்றன
உயிர்களை
*
நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010



நன்றி : கல்கி ஜனவரி 31, 2010



எவ்வளவு எளிதாக
சிலர் பிரியங்களைக்
கொலை செய்கிறார்கள்


குருதி பெருக
அமர்ந்து நான்
கொலை செய்த
உள்ளங்கையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்
*
நன்றி : கல்கி












ஒரு மாயையின்
மிகையுணர்ச்சிக்கு
மறுபெயர்
‘காதல்

*



நன்றி : கல்கி ஜனவரி 31, 2010







சில பொய்யான
பிரியங்கள்
ஒரு வேட்டை நாயென
குரல்வளையைக் குதறுகின்றன
ஆயினும்
அன்பை ஒருபோதும்
நான் தந்திரமென்று
ஒதுக்க இயலாதவளாகவே
இருக்கிறேன்
*
நன்றி : கல்கி ஜனவரி 31, 2010






தீராத வலிகளே
என்னை நான் வெல்ல
எனக்கு அளிக்கப்பட்ட
அஸ்திரங்கள்

வலிகளே என்னை
முழுமையாக்குகின்றன
வலிகளின் எல்லைகள்
விஸ்தீரணமடைவதிலேயே
எனது இருப்பு
ஸ்திரப்படுகிறது

*

நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010





Friday, January 15, 2010

சிக்கிமுக்கி.காம்




chikkymukky.com


சமூக கலை இலக்கிய இதழ்

ஜனவரி 2010 – இதழ் 3




தனது படைப்பைப்பற்றி


கவிதை -

ஆங்கில மொழியாக்கம் - தாரா கணேசன்

தமிழச்சி கவிதை - 1 கவிதை - 2


மொழிபெயர்ப்புக் கதை

தாரா கணேசன்


நூல் விமர்சனம்

அந்தரமீன் - தேவேந்திரபூபதி யின் கவிதை நூல்

க. மோகனரங்கன்


நேர்காணல்

வெளி ரங்கராஜன்

தாராகணேசன் & M.சௌந்தரராஜன்


கலை
ஓவியம்
தியோ பான் தஸ்பர்க்

தேனுகா

சிற்பம்
ரிஷப வாகன ஈசன் -

தேனுகா

ஒவியக்கூடம்
தியோ பான் தஸ்பர்க்

Wednesday, December 23, 2009




சிக்கிமுக்கி.காம்
சமூக கலை இலக்கிய இதழ்
டிஸம்பர் 2009 – இதழ் 2



கவிதைகள்



சிறு கதைகள்


அஜயன் பாலா
உமா சக்தி
லட்சுமி சரவணகுமார்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தாரா கணேசன்
பெருந்தேவி
கட்டுரைகள்
சாந்தாராம் [ஆந்தெரே ப்ரேடன் - ஆக்டேவியா பாஸ்]
இன்பா சுப்ரமணியம்


தொடர்கதை


கரிகாலன் - நிர்மலாவைக் கடப்பது

கலை

தேனுகா – பியட் மோந்திரியான்

ஓவியம்
ஓவியக்கண்காட்சி

[Light Cascading Woods]

(காந்திராஜன், மணிவண்ணன், புருஷோத்தமன், நடராஜன்

புத்தக விமர்சனம்
ராணி திலக்
[க. மோகனரங்கன் கவிதைகள்]


Friday, November 20, 2009


சிக்கிமுக்கி.காம்



நவம்பர் 2009 - இதழ் 1




I. கவிதைகள்


ஞானக்கூத்தன்
எஸ். வைத்தீஸ்வரன்
கலாப்பிரியா
அய்யப்பமாதவன்
ரவிசுப்ரமணியன்
சுதீர் செந்தில்
வா மணிகண்டன்
சக்தி ஜோதி
ழீலாட்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அசதா

(ரஷ்ய மூலம்: வெலரி நுகாதவ்)

கட்டுரை
பீர் முகம்மது , துபாய்
(எண்ணெயும் போரும் - தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து)


மொழிபெயர்ப்புக் கட்டுரை

தாரா கணேசன்
(நோபல் கவிஞன் ஷெமஸ் ஹீனி)

சிறுகதை

பிரபஞ்சன்

வண்ணதாசன்


தொடர்கதை

கரிகாலன்

நேர்காணல்

யவனிகா ஸ்ரீராம்
நேர்காணல் : தாரா கணேசன்

நூல் விமர்சனம்

இசை
(அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’ விமர்சனம்)

கலை - ஓவியம்
சிறப்புக்கட்டுரை

தேனுகா

சிக்கிமுக்கி.காம் - அறிமுகம்

சிக்கிமுக்கி.காம்


வணக்கம்!

தற்போது உலகம் முழுவதும் இணைய தளங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நமது தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் அதைச் சார்ந்த கட்டுரைகள் அனைத்தையுமே உலகமெங்கும் வசிக்கக் கூடிய நமது தமிழர்கள் இணையதளங்களின் மூலமாகவே வாசிக்கிறார்கள். சில சமயங்களில் புத்தகங்கள் அல்லது மாத இதழ்கள் அவர்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாத போதும் கூட விரைவாக இணைய தளம் அத்தேவையைப் பூர்த்தி செய்கின்றது.

அதன் அடிப்படையில், தொடர்ச்சியாக வரும் இணையதளங்கள் யாவற்றையும் நாம் உற்று நோக்கும் போது அவை இலக்கியப் படைப்பிற்கான ஒரு பரந்த வெளியாக இருந்த போதிலும், உலகளாவிய இலக்கிய அறிமுகங்கள், நவீன உள்ளூர் படைப்புகள், முக்கிய படைப்பாளிகளின் நேர்முகங்கள், துணிச்சலான விமர்சனங்கள், மாற்றுக்கருத்து மிக்க படைப்புகள் என பல்வேறு தளங்களில் இன்னும் தீவிரமாய் இயங்க வேண்டிய கட்டாயத்தையும் நம்மால் உணர முடிகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழில் இருந்தும் பிறமொழிகளுக்கும் பரிவர்த்தனை நடந்துகொண்டிருக்கிறது. இவற்றில் சமகாலத்திற்கான படைப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டமைக்கு சான்றுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.. தமிழின் பல படைப்புகள் இன்று உலகப் இலக்கியங்களுக்கு இணையாக மொழித்திறனும் விரிந்த உலகளாவிய தளத்தில் இயங்கக்கூடிய வீரியம் மிக்கவையாகவும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தகுந்தவையாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

இவை மட்டுமின்றி, தமிழில் புதிய படைப்பாளிகள் மற்றும் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய யாவரையும் மொழிவழியே ஒருங்கிணைத்து இலக்கியக் கலாசாரம் எவ்வாறு தமிழில் கடந்த ஐம்பது வருடங்களாக இயங்கி வருகிறது என்பது குறித்தும் அதன் தொடர்ச்சியாக உருமாறிவரும் பல்வேறு புதிய போக்குகளைக் குறித்தும் ஒரு ஆய்வு ரீதியான பார்வையை வழங்க வேண்டிய அவசியத்தையும் நம்மால் உணர முடிகிறது.

எனவே மேற்சொன்ன கருத்துகளை முழுவதுமாய் உள்வாங்கி, தமிழில் புதிய முயற்சியாக “சிக்கிமுக்கி” என்ற இணைய இதழை தமிழ் இலக்கிய உலகத்திற்கும், அதன் படைப்பாக்கத்திற்கும் ஒரு புதிய வெளியாக உருவாக்கி நவம்பர் 2009ல் அதனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்.

”சிக்கிமுக்கி” என்ற இந்த இணைய இதழ் தனது செயல்திட்டமாக, உலக செவ்வியல் பண்புமிகுந்த இலக்கியங்கள் தொட்டு தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளைத் தூண்டும் வண்ணமும், தத்துவார்த்தக் கோட்பாட்டு உருவாக்கங்களை மையமாக்கி ஒரு புதிய இலக்கை நோக்கி இலக்கியத்தை நகர்த்தும் வண்ணமுமாக தனக்குள் உறுதி கொண்டிருக்கிறது.

ஆகவே உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளும், வாசகர்களும் இந்த இணைய இதழில் பங்கேற்றும் புதிய மாற்றுக்கருத்துள்ள தங்களுடைய படைப்புகளை அனுப்பியும் எமது இலக்கிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
”சிக்கிமுக்கி” தாரா கணேசன்