Saturday, April 25, 2009

குகைக்குள் ஒரு குழந்தை




மெல்லத் தவிக்கும் குழந்தையென
தூக்கமற்ற நேற்றைய இரவின் தூக்கம்
விரல் நீட்ட குறும்பாய்த் தலையசைத்து
கண்ணா மூச்சி ஆடவே
விரும்புவதாய்ச் சொன்னது
கண்களின் குகைக்குள் ஒளியச் சொல்லிக்
கவிதைகளின் ஒளிகொண்டு தேட
குகையெங்கும் வெளிச்சம்
தேடியும் காணவில்லை
அதனை எங்கும்
ஏமாற்றத்துடன் ஒளிக்கவிதையை
துதிப்பாடலாய் இசைத்தேன்
எங்கிருந்தோ தவழ்ந்து
மடியில் தலை சாய்த்து
உறங்கத் தொடங்கியது
அந்த தெய்வீக இசையில்
அது