Thursday, May 28, 2009






உறக்கமற்ற பின்னிரவில்
இது வேறோர் காலமாய் இருந்தது
மாயக் குகை ஒன்றின்
ஆதி இருள் நுழைய
கால அகாலத்தில் உலவும்
துன்ப உடல்
அகாலத்தின் சுரங்கம்
அழைத்துச் சென்றது
வேறோர் கனவின்
ஆழ் உறக்க வெளிக்குள்
விழிப்பினுள்ளே உறக்கம் மூழ்கியவள்
கனவுக் குடுவை ஏந்தி
இறக்கை முளைத்த
இருள் மோகினியாய்
ஊற்றுகிறேன்
உன் நினைவுக் கோப்பையில்
கொஞ்சம் சோமபானம்.



Wednesday, May 27, 2009

MERMAID, DOLPHIN AND THE SERENE EVE




Along the ECR Coast
Paatti will wave at you
from the waves


When you are
at the shore
you will never miss her
salty kisses

The setting sun
would rock her chair
amidst the surf

A mermaid would have
a moon-lit suck
of her breasts

Dont ever miss
the Dolphin's song
'PATTI... THE SERENE EVE'

* * * * *

The dishevelled
yester kolam dots
the disendowed badam leaves
the disconsolate empty chair
the remnants of
dismembered grey over the scissors....
an unclad angelic shadow
within the bathroom walls....
and a lot more is there
with you


Affectionately
Admirer of Hues

SHOULDERING THE GRIEF

Dear Thara,

i dont have many words. in a tightness of feelings and loss of words, i could share your sorrow not in words or symbols... but remember it is there...

paattiji, loved by you and by all others,.... she appeared in poems of yours... but that kindred spirit gave you ideas...you linked her with your own life with words, her ways with your ways... her past with your present...

somehow the sadness mixed time with inescapable feeling of life....

im sorry i could not come... firstly, i dont even know how to react to deaths... i did not know how i can come and help with things... i was confused due to my own policies/thoughts....

i might die earlier.....and i wont care who comes to attend.... besides, i have plans to go secret on things

sharing your lament....

Soundar
தீ குச்சியிலிருந்துதீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த தீயின்
மிச்சத்தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்
அணைத்து கரைக்க..!

அன்பின் தாரா,

இது எப்போதோ நான் எழுதிய கவிதை. கீதையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? இல்லை..இப்போது..நீங்கள் இப்படி இருப்பதுதான் சரி..குழந்தை மனமே..அந்த பாட்டிக்குநீ பெயர்த்தியா,,தாரா பாட்டிக்குஅவர்கள் பெயர்த்தியா..புரியல.. யாரும் நம்மை விட்டு போக முடியாதும்மா..அவங்க் உன் கூடதான் இருப்பாங்க...!

யாக்கை கவிதை என் தமிழ் கவியுலகம் வியக்கும்கவித்தாரகையின்உள்ளில் மிக இயல்பாய்புரியாது கேள்வி கேட்கும் ஒரு பிள்ளைமையின் புரியா அலறலை எனக்குள் பிழிந்தது. எல்லா சம்பிரதாயங்களும்..எல்லாம் முடிந்ததும்..திரும்பி பார்க்காமல்தான்போக சொல்கின்றன.

திரும்பிவிட்டால்..தேங்கிவிடுவோம்..தாரா..

எந்த அளவீட்டு கருவிகளாலும் அளவிட முடியாத அன்பு ஊற்று உங்கள் மனமென புரிகையில் அந்த பாட்டி கொடுத்துவைத்த்வர்கள்தான்.

எந்த பெயரத்தியும்..பாட்டிக்காக இப்படி துடித்ததாய்..நான் அறிந்ததில்லை..
அன்று இதே துடிப்பு ஷ்யாமிடமும்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள்.
அன்பு பாட்டியின் ஒவ்வொரு சொல்லையும் வாழ்க்கை ஆக்குங்கள்.

எனக்கு சரியான நேரத்தில் தெரிந்திருந்தால்..அந்த தெய்வத்தின்பொட்டல காலில் விழுந்தாவது வணங்கஓடிவந்திருப்பேன்.

எனக்கும் உள்ளூற பயம்தான்..உம்மாச்சியை எண்ணித்தான்..பயம் மரணத்தின் மீதல்ல..செய்ய முடியாமல் போகும் சாதனைகள் மீது.

உங்களுக்கொன்று தெரியுமா..அந்த் முகம் தெரியா பாட்டி"டேய் நான் சொல்றேண்டா..நினைக்கறதை எல்லாம்முடிச்சிட்டு நிதானமா வா..நான் சொல்றேன்"என வானத்திலிருந்து வாழ்த்துவதுபோல பிரமை.

பாட்டி நம்மோடுதான் இருக்கிறார்கள்.
சாப்பாட்டு மேசையில் அவர்களுக்கு ஒரு நாற்காலி
உங்கள் அலுவலகத்தில் ஒரு இருக்கை
வாகனத்தில் செல்லுகையில் பக்கத்தில்
எப்போதும் மனக்குகையுள்....!

பாட்டி எங்கேயும் போகவில்லை. இதோ என்னிடம்கூட வந்து பேசும் - வாழ்த்தும்- ஆசி சொல்லும் - பாதுகாக்கும்- நினைத்தாலே வந்து குரல்கொடுக்கும் - சிரிக்கும் - இன்னும் எழுதுடாஎன்று சொல்லும் -ஓர் உயர்ந்த நிலையில் நம்மோடேதான் இருக்கிறார்கள்.

அன்புடன்
வெங்கட் தாயுமானவன்

Tuesday, May 26, 2009

யாக்கை


பாட்டிம்மா.........

பாட்டிம்மா
உம்மாச்சி கிட்டே போய்ட்டாங்க.
நேத்திக்கி காத்தாலெ 4 மணிக்கு
உம்மாச்சி அவங்களுக்கு
பூ காட்டிட்டு கூட்டிட்டு போய்டுச்சு

அப்புறம் அவங்க உடம்ப
பொட்லம் கட்டிகுடுத்தாங்க
ஐஸ் பொட்டில போட்டு
வீட்ல பொட்லத்த வச்சு
எல்லாரும் சுத்தி நின்னு
அழுதோம்
மேலேர்ந்து அவுங்க
சிரிச்சுக்கிட்டே பாத்தாங்க
கடவுள் மடிலேந்து
சாயங்காலம் 4 மணிக்கு
மின் தகனமேடைலே
சரட்டுனு பொட்லத்தை வெச்சு
தள்ளிட்டாங்க
குபு குபுன்னு நெருப்பு
பத்திக்கிச்சு

5 மணிக்கு மேலே
எலும்பு சாம்பல் எல்லாம்
இன்னொரு மூட்டேல குடுத்தாங்க

6 மணிக்கு கடலுக்கு போனோம்
பலூனல்லாம் வித்தாங்க
சின்ன புள்ளங்க அத வெச்சுக்கிட்டு
விளயாடறத பாத்துகிட்டே
இந்த சாம்பல் மூட்ட வச்சுகிட்டு
கடல் கிட்டே போனேன்

பெரிய அலை வந்துச்சு
மூட்டைய திறந்து
சாம்பலக் கரச்சுட்டு
திரும்பிப் பாக்காம வந்துடோம்

வந்து பாத்தா
அதே நாற்காலிலே
அவுங்க உக்காந்து

“எங்கே போனம்மா
இவ்ளோ நேரமான்னு”
சிரிச்சுட்டே கேட்டுட்டு
காபி போட்டுத் தந்தாங்க

Because I could not stop for Death,
He kindly stopped for me;
The carriage held but just ourselves
And Immortality
- Emily Dickinson

Patti, even death cannot separate you from me


பால்யத்தின் பிராயங்களை
மென்று கொண்டிருக்கிறாள் பாட்டி
தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி

திரைவிழுந்த விழிகள்
இருப்பிற்கு அப்பால்
இனமறியாப் பதற்றத்துடன்

விடுவித்துக்கொள்ள இயலாத
பெருந்துக்கம் உலாத்தும் அவளை
விசித்திரமான புதிர் உலகில்

மர்ஃபி குழந்தையென ஆட்காட்டி விரல்
முகவாயில் பதிந்திருக்க
ஆழ்ந்த மௌனத்தின் வெளியில்
குரலற்ற காகமாய் அலையும்
நீராலான விழிகள் தருவிக்கிறன
‘லால்குடி’ நினைவுகளின் மின்னலை

உறைந்த விழிகளின் ஓரத்தில்
உருளக்காத்திருக்கிறது கண்ணீர்
சுருக்கம்மிகு கன்னங்களின் மீது

எவரும் புரிந்துகொள்ள இயலாத
நினைவுகளின் தொகுப்பை
ஓயாமல் உதடுகள் முணுமுணுக்க

காலம் இசையமைத்துக்கொண்டிருக்கிறது
அவளின் அந்திமப் பாடலை
(ருதுவனம்)

Saturday, May 16, 2009

பூமிக்குள் பாறை


ரோமமற்ற
பரந்த ராட்ஸச மணல் மார்பில்
சிதறி கிடக்கும் கிழிந்த முலைகள்..
காற்றின் ஊழிக் கால நகங்கள்
உயிர்க்குருதியை உறிஞ்சிக் குடிக்கப்
பைத்தியவெறியால் பேயொலியுடன்
பூமியை பிறாண்டும் அகாலங்கள்...
நுண்ணிய தப்படிகள் வைத்து
தப்பித்துக் கொள்ள முயலும்
ப்ரும்மாண்டப் பாறைகளின்
இடம்பெயர்தலைக் காட்டிக் கொடுக்கும்
மணல்கோடுகள் ..
ஆனாலும் எதுவும் சலனமற்றதான
பொய்வெளிச்சத்துடன்
லட்சியம் செத்த இறந்த மனத்தைப் போல்
விரிந்து கிடக்கும் பாலைவனம் ;
இங்கே உண்டு
நமது இதயத்திலும்
பிரபஞ்சத்திலும் ..

எஸ். வைத்தீஸ்வரன்

Tuesday, May 12, 2009

யவனிகாவின் கவிதை உலகு

யவனிகாவின் மிகை உலகு

ஒரே வரிக்குள் ப்ரபஞ்சத்தையே அடக்கிவிடக்கூடியது எதுவென்றும் புதிரான இருப்பையும் சராசரி வாழ்வையும் ஒரு நொடிக்குள் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிவிடக் கூடியது எதுவெனவும் என்னிடமிருந்த ஒரு மாயக்கண்ணாடியிடம் வினவ, அது எனக்கு ரகசியமாய்ச் சொன்ன பதில் “கவிதை” .

நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் நாட்டுக் கவிஞனான ஹுவான் ரேமென் ஹிமேனெஸ் தனது வாழ்நாளில் இவர் 20 கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் நானே எழுதியது போன்ற உணர்வைத் தருகின்ற இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான் நானல்ல
நானே பார்க்க இயலாமல் என்னருகில் நடப்பவனும்
எப்போதாவது நான் சென்று சந்திப்பவனும்
சில சமயங்களில் நான் மறந்து விடுபவனும்
நான் உரையாடும் தருணங்களில்
அமைதியாக இருப்பவனும்
நான் வெறுத்து ஒதுக்கும் போது
இனிமையுடன் மன்னிப்பவனும்
நான் அறைக்குள்ளிருக்கையில்
வெளியே உலவிக்கொண்டிருப்பவனும்
நான் இறந்துவிடுகையில்
உயிரோடு நின்றுகொண்டிருப்பவனுமே
நானாயிருக்கிறேன்


மொழியின் மீதான தீராப்பசிதான் கவிதை உலகிற்குள் வாசகியாய் என்னை வழிநடத்திச் செல்கிறது. இப்படி நான் உலகக் கவிதைகளை தேடித் தேடிப் படித்துக்கொண்டிருந்தாலும் உலகத் தரத்திற்கு சற்றும் குறைவற்ற எழுத்துத் திறமையும் மொழி ஆளுமையும் உள்ள தமிழ்க் கவிதைகளை வாசிக்கும் போது மிகுந்த வியப்படைகிறேன்.

உலகமயமாக்கலில் கரைந்து கொண்டிருக்கும் நமது இருப்பும், இருப்பின் போராட்டங்களின் துன்புறுதலுக்கும் இடையே ஏறி ஏறிச் சருக்கிவிழும் வாழ்விலிருந்து கனவு வரிகளால் நம்மைக் கட்டியிழுத்து வேறோர் உலகிற்கு கொண்டு செல்வது மாதிரியான கவிதைகளைத் தருவதில் யவனிகா ஸ்ரீராமின் பங்களிப்பு அதிமுக்கியமானது. உணர்வுகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தக்கூடிய திறன் உள்ள யவனிகாவின் கடவுளின் நிறுவனமும், சொற்கள் உறங்கும் நூலகமும், திருடர்களின் சந்தையும் இதுவரையில் கண்டிராத வித்யாசமான கவிதை உலகினை அறிமுகம் செய்கின்றன.

பரந்த உலக நோக்குடனான கவிதை செய்யும் இவர் மானுடப் பிரக்ஞையை மறக்கடிக்கக்கூடிய மயக்கந்தரும் சொற்றொடர்களை வைத்து கலகத்தை உண்டுபண்ணக்கூடிய தீவிரமான அரசியல் கவிதைகளை மொழிப்படுத்துகிறார். கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாக இல்லாமல் ஒவ்வோர் வரியிலும் வாசகனை இறுத்தி வைக்கும் வலிமையான சொற்பதங்களையும் காட்சிப் படிமங்களையும் உருவாக்கும் தந்திரம் இவருக்கு கைவந்த கலையாய் இருக்கிறது.

கவிதைக்கான தீவிர மனோநிலையில் செயல்படும் இவர், வழக்கமான சூழல்களையும் உணர்வுகளையும் மட்டுமே கவிதையாக்காது, முற்றிலும் புதுமையான பார்வையுடன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் ஒவ்வொரு அசைவினையும் நுட்பமான பதிவுகளாக்கி அதனை மொழிக்குள் எளிதாய் வசப்படுத்தி விடுகிறார். புலன்களை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாய் தனக்குள் உதிக்கும் காட்சிகளை அல்லது தான் கண்டிருந்த காட்சிகளையோ தொன்ம வேர்களுடனான நவீன விருட்சமாக்கி சீறிப்பாயும் இவரது மொழி ஆற்றல் வியப்பையும் பேரதிர்ச்சியையும் தருவதாய் இருக்கிறது.

கடல் வாணிபமும், கடற்பறவைகளும், கடற்கரை உணவகமும், சுட்ட மீனும், பரவலாய் காணப்படுகின்ற இவரது கவிதகளை நெய்தலின் நவீனம் என்றுகூடச் சொல்லலாம். ஆயினும் எந்த ஒரு சட்டத்திற்குள்ளும் அடைத்து விட முடியாத பிரம்மாண்ட ஓவியமாய் வானுக்கும் பூமிக்குமாய் விரிந்துகிடக்கிறது இவரது கவிதை தீட்டிய கித்தான்.

ஒரே கவிதைக்குள் பலவிதமான மனிதர்களை, அசைவுகளை, நிகழ்வுகளை, விநோதங்களை, அடுக்கிக்காட்டியும் ஒரு குறும்படத்தினைப் போல காட்சிகளை அடுத்தடுத்து வேகமாய் நகர்த்தியும் வெவ்வேறு கோணங்களில் காட்சியின் விரிதல்களையும், ஒரு 3Dயின் வடிவம் போன்று கண்முன் நிறுத்துகிறார் தனது விந்தைக் கவிதைகளின் வழியே.. பொதுவாகவே நீண்ட, இடைவெளியற்ற, கவிதைகள் ஒருவகையான சலிப்பையும், தொடர்வாசிப்பிற்கான இடைஞ்சலையும் உருவாக்கக்கூடுமெனினும் இவரது காட்சிப்படிமங்களில் நாம் உணர்கின்ற அதிர்வலைகளும் ஆச்சர்யங்களும் இவரது கவிதையின் ஒரு மாயச்சுழலுக்குள் அனாயாசமாய் நம்மைச் சிக்கவைத்து அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

பறவைகள் முட்டையிலிருந்து வருவதைப் போல நம்பிக்கைகள் நிலத்திலிருந்து எழுகின்றன (திருடர்களின் சந்தை) என்ற முதல் கவிதையின் வரியில் இருந்து தொடங்குகிறது இவரது கவிதை மீதான நமது நம்பிக்கையும். வாசகனுக்குத் தன் நிலத்தின் அருமையினைக் காட்டுகின்றது காலக் கண்ணாடியில் இவரது மாய வரிகள் உருவாக்கும் பிம்பம். எனது நிலம் எப்போதும் சூரிய பார்வையில் இருக்கிறது - என்ற வரியில் தனது நிலம் குறித்த பெருமையினை கம்பீரமாய் ஒரு அரசனைப் போலச் சொல்ல முடிகிறது இவரால்.

இவரது காயங்களிலிருந்து பெருகும் குருதியை மாந்தி தேனீக்கள் குரூரமாய் ரீங்கரிக்கின்றன.. தன் கனவுகளின் நிலம் வழியே பெயரற்ற யாத்ரீகனாய் பயணிக்கும் இவர் அக்கனவுகளின் கருமசியை கவிதைகளில் துடைக்க, வாசகனின் விழிகளுக்குள் நீள்கிறது அறுந்து போன அவரது கனவின் வேறோர் அடர்ந்த பாதை. இவரது கனா நிலத்தின் இளம் பெண்கள் இரவெல்லாம் இயந்திரங்கள் ஆடைகளுக்குள் துழாவுவதாக முறையிடுவதாய் வருந்தும் இவர் நவீன உலக பெண்களின் வெளிப்படையான காம உணர்வுகளை முகத்தில் அறையும் வண்ணம் நம் முன் வைக்கிறார். வடிவமற்ற கனவுகளுக்கு உடலும் உணர்வும் உயிரும் தருகின்ற இவரது கற்பனை விநோதங்கள், கனவுகளை நுகர்ந்து பார்த்து அவற்றுக்குப் பழங்களின் மெல்லிய மணமிருப்பதாய்ச் சொல்கையில் வாசகனின் நுகர்வுச்செல்களைத் தூண்டி அத்தகைய வாசனை தேடி அலையுமாறு மறைமுகக் கட்டளையிடுகிறார்.

சின்னாளம்பட்டியின் சிறிய தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் இவரை, இவரது மாயக் கனவுநிலம் எந்தத் தருணத்தில் உள்வாங்கியிருக்குமென்பது குறித்தே பேராராய்ச்சியொன்று செய்தல் அவசியம். நில அதிர்வினைப்போன்ற விரிசல்களை வாசகனுக்குள் உருவாக்கும் இவர், தம் கவிதைகள் வழியே புதிர் உலகினுள் நுழைந்து வடிவம் மாறி மாறித் திகைக்கும் ஆலிஸ் போலத் தனது உணர்விழைகளை நீட்டியும் குறுக்கியும் அலைகிறார், தனது கனவு நிலமெங்கும் ஒரு மென்னுடல் நத்தையென.

உயரமான கட்டிடமொன்றில் தொங்குமொருவன் விளிம்பில் எச்சமிட வந்த பறவையுடன் உரையாடி மகிழ்வதை எப்படிக் கவிதைக்குள் சிந்தித்திருக்க இயலுமென வியந்து ரோமங்கள் குத்திட்டு நிற்கையில் அந்தப் பறவை தனது காலொட்டியிருக்கும் மகரந்தங்களை அவனது முகத்தில் மஞ்சள் கோடுகளாய் வரைகின்ற நுட்பமான கற்பனை அதீதமான பனியின் சில்லிப்பை நரம்புக்குள் செலுத்துகிறது சப்தமின்றி.

இவர் காட்சிப் படுத்தும் வகை வகையான படிமங்கள் அதிர்வைக் கொடுத்து கலகத்தை விளைவிக்கின்றன. ஒருவிதமான அச்சமூட்டக்கூடிய காட்சிப் படுத்தலும் நம் முன் விரிகின்றன.

கிழிபட்ட காயத்தை தக்கிறவன், சொற்களை புதுப்புது நூல்களாகத் தொகுப்பவன், இறந்தவனின் எச்சங்களைச் சேகரிப்பவன், முதிர்ந்த மூங்கிலைத் துளையிட்டு இசைப்பவன், தொப்பிக்குள் மறைந்திருக்கும் ஓநாய்த் தலையன், என்று இப்படிப் பலவிதமான மனிதர்கள் உலவும் உலகமாய் இருக்கிறது அவரது திருடர்களின் சந்தை. வீடற்றவர்களின் உலகம் என்ற கவிதையில் இவர் காட்டியிருக்கின்ற கவிதைக் கோணங்கள் விஞ்ஞானத்தின் குளோனிங் விந்தைகளையும் விலங்குகளின் உலகத்தையும் மூன்றாம் உலக யுத்தத்தையும் கடைசி மனிதனின் வாழ்வுக்கான தவிப்பையும் உரத்த நியாயங்களாய் பதிவு செய்திருக்கிறது. இன்றுவரை நான் வாசித்துணர்ந்த கவிதைக்ளில் இல்லாத உணர்வுகளின் புகைமப் பிரபஞ்சத்தை என்னுள் நிரப்பியிருக்கின்றன இவ்ரது கவிதைகளின் படிமங்களும், காட்சிப் படுத்தல்களும், கனவின் மாயைகளும்.

இவரது கவிதைகளில் நகரும் கழிவறைகளும், புதுப்பிக்கப்பட்ட ஆலயக் கழிவறையும் நவீனமாக்க வேண்டிய பழங்கழிவறையும் சால்வடோர் டாலியின் நவீன ஓவியங்களை நினைவூட்டுகின்றன.

கடவுளின் நிறுவனத்தின் ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் விதமான உணர்வுகளை உருவாக்க அடுத்தடுத்து நிகழும் பருவ மாற்றத்தினுள் சிக்கித் தவிப்பது போலொரு உணர்வெழுகின்றது. கரும் ரேகை படர்ந்த கூழாங்கற்களையொத்த கண்களின் வெடிப்பிற்குள் அரவங்கள் நெளியக் காணும் இவரது பார்வை மிகவும் விநோதமாய் இருக்கிறது. ஒரு அடர்ந்த வனத்தினூடே நெருப்பென ஊர்ந்து சொல்கிற்து இவரது மொழி. உயிர்வளி மண்டலத்தில் பருவங்களின் காலமாற்றத்தை நத்தைக்கூடுகள் இவரது கனவுலகில் நகர்த்த கானல் தகடுகளில் நீர்ச்சலனமாய் எழுகிற உடலுடன் தனது கவிதையின் மாயநிலத்தை சித்தரிக்கிறார் பிரபஞ்சத்தின் விளிம்புகளைத் தீட்டமுடியா தூரிகையில் மீந்த வர்ணத்தில்.

உடைந்த பற்கள் கொண்ட வேசியினை இவர் எந்த நிலத்தில் கண்டிருக்கக்கூடுமென யோசித்த போது, சாஸரின் “Canterbury Tales”ன் ஒரு கதாபாத்திரமான ஐந்து முறை மணம் செய்து கொண்டபின்னும் பலருக்கு ஆசை நாயகியாயிருந்த, முன்னிரண்டு பற்களின் இடையே அகன்ற இடைவெளிகொண்டவளும், ஒற்றைக் காது செவிடான, தன்னை சீமாட்டி போல் அலங்கரித்துக் கொள்வதில் அளவற்ற விருப்பமுடனும், எல்லோரையும் வாதுக்கு அழைப்பவளாகவும், காமலீலைகளில் கைதேர்தவளுமான Bath நகர ஆசைநாயகியை ஏனோ அவள் நினைவூட்டுகிறாள்.

மொழியை தீராத காமத்துடன் சலிப்பின்றி புணர்கிறது இவரது கவிதை. தூய காமம் முற்றிலும் ஆவியுலகு சேர்ந்தது என்றெழுதப்பட்ட வரிகள் ஆதியுலகின ஏவாளின் கனிந்த புன்னகைக் கீற்றைப் பிரகடனம் செய்கிறது. இவரது காதலியின் சரேலென்ற ஆடைவிலகலில் உலகம் இற்று வீழ்கிறது பிடிமானமின்றி. ஆதாமுக்கும் ஏவாளுக்குமாய் கடவுள் படைத்திருந்த ஏடனும் சாத்தானின் தூண்டுதலில் உண்ட அறிவுக் கனி சரேலென விலக்கிக் காட்டிய நிர்வாணத் துகிலும் ஆதி மனுஷிக்குள் சங்கமித்த முதற்காமமும் அதன் பின்னாக இறைவனின் சபித்தலில் இற்று வீழ்ந்த உலகும் டாவின்ஸியின் இடமிருந்து வலமாய் எழுதப்பட்டுள்ள விளங்கிக்கொள்ள இயலாத விநோதப் புதிராய் யவனிகாவின் கரம்வழியே நம்முன் அவிழ்கின்றன.

உலகம் ஒரு விஷத்துளியைப் போல் அழகானதென்றும் ஆழ்கனவுகளால் பைத்தியம் பிடித்தலைகிறது இப்பூமியென்றும் தனது கூரிய வரிகளால் எழுதிச் செல்கிறார். நிலத்தைப் பாளம் பாளமாக உரித்தெடுத்து மடித்து வைக்கின்ற ஒருவனை உருவாக்கி அவன் மதுசீசாக்களுடன், சில துப்பாக்கி ரவைகளையும், பழஞ்சொற்ச்சுவடியையும் சேகரித்துக் குவிப்பவனாக்கிக் கலகம் விளைவித்து அமைதியாய் தூண்டிலோடு அமர்ந்து கொள்கிறார். சூரியக் கோளம் நுழைவாயிலென அவரது வருகைக்கென தரையில் விழுந்து திறந்து கிடக்க, எழுதப்படாத காகிதம் போல் படபடக்கிறது கடல் இந்தக் கவிஞனின் முன்னே.

கீழ்த்திசையும் மேல்த்திசையும் கடற்பயணம் செய்த யவனனின் அனுபவ முதிர்ச்சி தொனிக்கிறது இவரது கவிதைகளில். கவிதைகளுக்குள் இத்தனை கனவுலகும், விநோதங்களின் அதீதங்களும், காணாத தேசங்களின் மனிதர்களும், செதில்கள் நிறைந்த விசித்திரப் பிராணிகளும் மூழ்கிக் கிடக்க இவர் கிரகங்களை மேருவாக்கி கற்பனைக் கயிறுகட்டிக் கடைந்து நிற்க ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் மேலெழுந்து வருகின்றன கவிதையின் அமிர்தகலசமாய்.

காமத்தின் பரவச்ங்களை இழக்கத் தொடங்கும் போது ஒருவன் ஞானியென நடிக்கத் தொடங்குகிறான் என்று தத்துவார்த்தங்களும் நிறைந்து ந்மமை பிரமிக்க வைக்கின்றன இவரின் கவிதைத் தொகுதிகள்.

கடவுளின் முகத்திற்குக் கூட திடுக்கிடும் வடிவம் கொடுத்திருக்கிறது இவரது தொகுப்பு. காலங்களின் உள்ளோடு மண் அள்ளி வீசுகின்ற துயரத்தின் அழகில் கவிதைகள் ஒலித்தபடி இருக்க கடவுளின் முகத்தை வரைவதாகச் சொல்கிறது அந்த ஓவியம் போன்ற கவிதை

கனவுகளின் புனைவும் மொழியின் செரிவுமாய் அமைந்திருக்கும் இவரது கவிதைகள் காலத்தால் அழியாதவை.


”ஆனால்
அவனுக்கு எப்படித் தெரியும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுதும் இதே முடிவை எடுத்திருப்பது பற்றி”

- சொற்கள் உறங்கும் நூலகம்

Saturday, May 9, 2009




உதிர்ந்தவன் அவன்

மழையாய் உதிர்ந்தன மலர்கள்
வண்ணம் பூசிச் சிரித்தன
அங்கம் நெடுகிலும்
கைம்மாறின்றி
நிறைத்துக்கொண்டிருந்தது வாசனை
உதிரும் பூக்கள் மீது
வீசத் தொடங்கினான்
உறுத்தும் வார்த்தைகளை
சலிப்பில்லாமல் விழுந்தன
குலுங்கிய பூக்கள்
மேலும் மேலும் அவன் மீது
வண்ணங்கள் மீதும் வாசனை மீதும்
ஆத்திரங்கொண்டு
வீசினான் உலோகக் கோடாரியை
அதிர்விலும் கூட உதிர்ந்தன மலர்கள்
மூளைக்குள் நிறைந்த இனமறியா வெறியில்
ஓங்கி ஓங்கி வெட்ட
உடைந்து சாய்ந்தது
உதிர்க்காமல் மரம்
வலியின் இறுதியில்
மலர்களையெல்லாம் தன்னுள் பூட்டி



ஆண்கள் நிறைந்த

இவ்வுலகில்

பெண்ணாயிருத்தல்

பெரும் பாவமெனில்

முலைகளையும்

யோனியையும்

அறுத்தெறிகிறேன்

என்னுடல்

கவிதை இனி