Saturday, January 30, 2010

விளக்கு விருது






கவிஞர் விக்கிரமாதித்தனுக்கு விளக்கு விருது








Monday, January 25, 2010







காதலைப் போலவே
காயங்களும் கூட
உன்னதமானவைதான்
நாட்காட்டியின் பக்கங்களில்
உன்னதங்களின்
நிழல் படர்ந்திருக்க
வாசனையற்ற நினைவுகள்
உதிர்கின்றன அதன் மீது
*


நன்றி : கல்கி, ஜனவரி 31 , 2009



எந்த நேரமும்
அறுந்து விழக்கூடிய
மெல்லிய இழையில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகள்

அர்த்தங்கள் உணர்த்தும்
மொழி வசீகரிக்கிறது

தற்செயலாய் உதிரும் அவை
மாறா வடுவை உண்டாக்கவோ
அன்றி, ஆறாப் பழங்காயங்களை
ஆற்றவோ வலிமையுடையன

அவற்றில் சில கீறிப் பிளந்து
விளைவிக்கின்றன
புதிய முளைகளை
வேறு சில
புதைப்பிக்கின்றன
உயிர்களை
*
நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010



நன்றி : கல்கி ஜனவரி 31, 2010



எவ்வளவு எளிதாக
சிலர் பிரியங்களைக்
கொலை செய்கிறார்கள்


குருதி பெருக
அமர்ந்து நான்
கொலை செய்த
உள்ளங்கையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்
*
நன்றி : கல்கி












ஒரு மாயையின்
மிகையுணர்ச்சிக்கு
மறுபெயர்
‘காதல்

*



நன்றி : கல்கி ஜனவரி 31, 2010







சில பொய்யான
பிரியங்கள்
ஒரு வேட்டை நாயென
குரல்வளையைக் குதறுகின்றன
ஆயினும்
அன்பை ஒருபோதும்
நான் தந்திரமென்று
ஒதுக்க இயலாதவளாகவே
இருக்கிறேன்
*
நன்றி : கல்கி ஜனவரி 31, 2010






தீராத வலிகளே
என்னை நான் வெல்ல
எனக்கு அளிக்கப்பட்ட
அஸ்திரங்கள்

வலிகளே என்னை
முழுமையாக்குகின்றன
வலிகளின் எல்லைகள்
விஸ்தீரணமடைவதிலேயே
எனது இருப்பு
ஸ்திரப்படுகிறது

*

நன்றி : கல்கி, ஜனவரி 31, 2010





Friday, January 15, 2010

சிக்கிமுக்கி.காம்




chikkymukky.com


சமூக கலை இலக்கிய இதழ்

ஜனவரி 2010 – இதழ் 3




தனது படைப்பைப்பற்றி


கவிதை -

ஆங்கில மொழியாக்கம் - தாரா கணேசன்

தமிழச்சி கவிதை - 1 கவிதை - 2


மொழிபெயர்ப்புக் கதை

தாரா கணேசன்


நூல் விமர்சனம்

அந்தரமீன் - தேவேந்திரபூபதி யின் கவிதை நூல்

க. மோகனரங்கன்


நேர்காணல்

வெளி ரங்கராஜன்

தாராகணேசன் & M.சௌந்தரராஜன்


கலை
ஓவியம்
தியோ பான் தஸ்பர்க்

தேனுகா

சிற்பம்
ரிஷப வாகன ஈசன் -

தேனுகா

ஒவியக்கூடம்
தியோ பான் தஸ்பர்க்