Wednesday, September 9, 2009



உறக்கமற்ற இரவுகளில்
நான் கவிதை எழுதுவதில்லை
தொடர் புகைப்பதில்லை
மது மிடறுகளும் கிடைப்பதில்லை
என் கழுமரத்தைச் சுற்றும்
பருந்துகளின் நிழல்களை
விரட்டுவதற்குள்ளேயே
விடிந்துவிடுகின்றது
மற்றொரு பகலின் வதைமுகம்

5 comments:

  1. கவிதை பிடித்திருந்தது.
    ஒவ்வொரு பகலின் முகமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது

    ReplyDelete
  2. அனுபவித்தவர்களுக்குத் தெரியும் இக் கவிதையின் அருமை.கழுமரம் என்கிற சொல் உணர்வை உச்சத்திற்குக் கொண்டுசெல்கிறது.

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் விட ... முத்துவேலுக்குக் குழந்தை முகம்!!

    ReplyDelete
  4. அருமை! சொல்லாற்றளிலும் சொல்லிய விதத்திலும்!..

    ReplyDelete