Saturday, July 4, 2009




பாலை நான்
கானல் நீரை அருந்து
தாகம் தோன்றும்
கடந்து போ என்னில் இப்போது
இன்னும் அதிகம் தாகிப்பாய்
ஒட்டகத்தை எங்கே தொலைத்தாய்
தேடாதே, மணல் மேடுகளுக்குள் மறைத்துள்ளேன்
கிழிந்த ஆடையணிந்த பாரசீகக் கவிஞனைப் போல்
யாழுடன் பாடித்திரி
ஒரு பௌர்ணமியின் ஒளிக்கடலில்
நிறுத்தாமல் நீயிசைக்கும் அந்தப் பாடலில்
பாலை முழுதும் பேரீச்சை பழுக்கட்டும்

*

1 comment: