Thursday, May 28, 2009






உறக்கமற்ற பின்னிரவில்
இது வேறோர் காலமாய் இருந்தது
மாயக் குகை ஒன்றின்
ஆதி இருள் நுழைய
கால அகாலத்தில் உலவும்
துன்ப உடல்
அகாலத்தின் சுரங்கம்
அழைத்துச் சென்றது
வேறோர் கனவின்
ஆழ் உறக்க வெளிக்குள்
விழிப்பினுள்ளே உறக்கம் மூழ்கியவள்
கனவுக் குடுவை ஏந்தி
இறக்கை முளைத்த
இருள் மோகினியாய்
ஊற்றுகிறேன்
உன் நினைவுக் கோப்பையில்
கொஞ்சம் சோமபானம்.



No comments:

Post a Comment