Wednesday, May 27, 2009

தீ குச்சியிலிருந்துதீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த தீயின்
மிச்சத்தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்
அணைத்து கரைக்க..!

அன்பின் தாரா,

இது எப்போதோ நான் எழுதிய கவிதை. கீதையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? இல்லை..இப்போது..நீங்கள் இப்படி இருப்பதுதான் சரி..குழந்தை மனமே..அந்த பாட்டிக்குநீ பெயர்த்தியா,,தாரா பாட்டிக்குஅவர்கள் பெயர்த்தியா..புரியல.. யாரும் நம்மை விட்டு போக முடியாதும்மா..அவங்க் உன் கூடதான் இருப்பாங்க...!

யாக்கை கவிதை என் தமிழ் கவியுலகம் வியக்கும்கவித்தாரகையின்உள்ளில் மிக இயல்பாய்புரியாது கேள்வி கேட்கும் ஒரு பிள்ளைமையின் புரியா அலறலை எனக்குள் பிழிந்தது. எல்லா சம்பிரதாயங்களும்..எல்லாம் முடிந்ததும்..திரும்பி பார்க்காமல்தான்போக சொல்கின்றன.

திரும்பிவிட்டால்..தேங்கிவிடுவோம்..தாரா..

எந்த அளவீட்டு கருவிகளாலும் அளவிட முடியாத அன்பு ஊற்று உங்கள் மனமென புரிகையில் அந்த பாட்டி கொடுத்துவைத்த்வர்கள்தான்.

எந்த பெயரத்தியும்..பாட்டிக்காக இப்படி துடித்ததாய்..நான் அறிந்ததில்லை..
அன்று இதே துடிப்பு ஷ்யாமிடமும்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள்.
அன்பு பாட்டியின் ஒவ்வொரு சொல்லையும் வாழ்க்கை ஆக்குங்கள்.

எனக்கு சரியான நேரத்தில் தெரிந்திருந்தால்..அந்த தெய்வத்தின்பொட்டல காலில் விழுந்தாவது வணங்கஓடிவந்திருப்பேன்.

எனக்கும் உள்ளூற பயம்தான்..உம்மாச்சியை எண்ணித்தான்..பயம் மரணத்தின் மீதல்ல..செய்ய முடியாமல் போகும் சாதனைகள் மீது.

உங்களுக்கொன்று தெரியுமா..அந்த் முகம் தெரியா பாட்டி"டேய் நான் சொல்றேண்டா..நினைக்கறதை எல்லாம்முடிச்சிட்டு நிதானமா வா..நான் சொல்றேன்"என வானத்திலிருந்து வாழ்த்துவதுபோல பிரமை.

பாட்டி நம்மோடுதான் இருக்கிறார்கள்.
சாப்பாட்டு மேசையில் அவர்களுக்கு ஒரு நாற்காலி
உங்கள் அலுவலகத்தில் ஒரு இருக்கை
வாகனத்தில் செல்லுகையில் பக்கத்தில்
எப்போதும் மனக்குகையுள்....!

பாட்டி எங்கேயும் போகவில்லை. இதோ என்னிடம்கூட வந்து பேசும் - வாழ்த்தும்- ஆசி சொல்லும் - பாதுகாக்கும்- நினைத்தாலே வந்து குரல்கொடுக்கும் - சிரிக்கும் - இன்னும் எழுதுடாஎன்று சொல்லும் -ஓர் உயர்ந்த நிலையில் நம்மோடேதான் இருக்கிறார்கள்.

அன்புடன்
வெங்கட் தாயுமானவன்

No comments:

Post a Comment