Saturday, May 9, 2009




உதிர்ந்தவன் அவன்

மழையாய் உதிர்ந்தன மலர்கள்
வண்ணம் பூசிச் சிரித்தன
அங்கம் நெடுகிலும்
கைம்மாறின்றி
நிறைத்துக்கொண்டிருந்தது வாசனை
உதிரும் பூக்கள் மீது
வீசத் தொடங்கினான்
உறுத்தும் வார்த்தைகளை
சலிப்பில்லாமல் விழுந்தன
குலுங்கிய பூக்கள்
மேலும் மேலும் அவன் மீது
வண்ணங்கள் மீதும் வாசனை மீதும்
ஆத்திரங்கொண்டு
வீசினான் உலோகக் கோடாரியை
அதிர்விலும் கூட உதிர்ந்தன மலர்கள்
மூளைக்குள் நிறைந்த இனமறியா வெறியில்
ஓங்கி ஓங்கி வெட்ட
உடைந்து சாய்ந்தது
உதிர்க்காமல் மரம்
வலியின் இறுதியில்
மலர்களையெல்லாம் தன்னுள் பூட்டி

No comments:

Post a Comment