Saturday, March 7, 2009


மீண்டும் அந்த ரதிசிலை பார்க்கப்போனேன்
கிருஷ்ணாபுரம் ரதி முலை
ஸ்ரீவில்லிப்புத்தூர் ரதி முலை
பார்வதியின் மறைந்த மூன்றாம் முலை
கண்ணகி திருகியெரிந்த திவ்ய எரிமுலை
ஞானப்பாலீந்த உமை முலை
பாலருந்திய என் அம்மையின் அருள் முலை
மறுபடி பார்த்த ரதிமுலை
எல்லா முலையும்
இந்த மழைமாலையில்
முலைமாலையாக
நான் முலைமாலையணிந்த
கொற்றவை இன்று
(தாரா கணேசன்
ஒளிரும் நீரூற்று)
*

No comments:

Post a Comment