Saturday, March 14, 2009

இந்த வாரக் கவிதை - “வியியியாவு......”



இருளில் தோன்றும் பூனையின் மொழி
அறிந்தவனாய் இருந்தான்
ஒரு வெள்ளை உடல் குரலில்
கசாப்பு கேட்டு மருகிவிட்டது
அப்போது சுற்றிலும் விளக்குகள் அணைந்து
திறந்துவிட்ட கதவினுள் நுழையும்
கருப்புக் காலடிகள்
இருப்பதுபோல் இல்லாத அவ்வறை
ஹசின் குரல் தடுத்து
நிலைப்படி தாண்டாத மென் அடிகள்
மீன் சமைத்த வாடைநாளில் அதற்கு கிறுக்கு பிடித்திருந்தது
செதில முளைத்து பூனை
நீர் தேடிப் போய்விட்டது
அப்புறம் கள்வர்களுக்குள் குரல் புகுத்தும்
ஒரு நாய் வெள்ளையாய் சிறுத்துவிட்டது
ஆனால் குரைத்தது
சிறு குவளைகளில் ததும்பும் அசையாத
அந்த வெள்ளைக்குரல் தொடர்ந்து
யானியின் ஒலிக்கும் வாத்தியங்கள்
பூனையாய் பூனையாய் கரைகின்றன
வியியியாவு....
....நிசி அகவல்
அய்யப்ப மாதவன்


No comments:

Post a Comment